இனிப்பான செய்தி : "ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் " என்று குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா பாடியதைப் போல அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை உணர்ந்த ஆசிரியர் பெருமக்கள், அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மேன்மக்களாய் மாறுகிறார்கள். சிறுவர் இலக்கிய எழுத்தாளர் #கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த ஆற்றல் பொருந்திய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய ஒரு முகம் தான் சிறுவர் எழுத்தாளர் என்னும் அரிய பெரிய முகம். சிறுவர் எழுத்தாளர் உலகில் முன்னணி எழுத்தாளராக கன்னிக்கோவில் இராஜா அவர்களும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவருடைய சிறுவர்களுக்கான கதைகள் கடல் கடந்தும் பல்வேறு உலகத் தமிழர்களிடையே பரவலாக வாசிப்பை பெற்று வருகிறது. அவர் எழுதிய சிறார் கதையை #வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நூலை #லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது இந்நூலின் அட்டைப்படத்தை மு...
தமிழ் எழுத்துலகிலும்,சிறார் இலக்கியத்திலும் , நூல் வடிவமைப்பிலும் இராஜாவிற்கு இணை தோழர் கன்னிக் கோவில் இராசா அவர்கள் தான் ... ஹைக்கூ வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு உரியவர்...அதே போல சிறார் இலக்கியத்தில் இவர் பெயரைத் தவிர்த்து விட்டு வரலாறு எழுத முடியாது.நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்கள் படைத்தவர் .. தான் எழுதினால் மட்டும் போதும் என்று எண்ணம் கொள்ளாதவர்..புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து உள்ளம் மகிழ்பவர்..விருதுகளுக்கு மயங்காதவர் . அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைப் படைப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் லாலிபாப் சிறுவர் உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அன்புக் குழந்தைகளின் மாமாவாக வலம் வருபவர்... எங்கள் பள்ளிக் குழந்தைகள் எழுதிய #டமால்_டுமால்_பட்டாசு எனும் நூலுக்கு வாழ்த்துரை வழங்கி அழகாக வடிவமைப்பு செய்திருந்தார். இவரின் அடுத்த பாய்ச்சலாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறார் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை வழங்கி நெஞ்சம் மகிழ்கிறார்... இந்த மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்கிறோம் . கமலிக்கு உதவிய தேவதை எனும் கதையை மொழிபெயர்ப்பு செய்த க...
இனிப்பான செய்தி : https://www.facebook.com/share/p/176QXdUjpq/ "ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் " என்று குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா பாடியதைப் போல அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை உணர்ந்த ஆசிரியர் பெருமக்கள், அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள் . அதன் அடிப்படையில் அவர்கள் மேன்மக்களாய் மாறுகிறார்கள் . சிறுவர் இலக்கிய எழுத்தாளர் # கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த ஆற்றல் பொருந்திய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய ஒரு முகம் தான் சிறுவர் எழுத்தாளர் என்னும் அரிய பெரிய முகம். சிறுவர் எழுத்தாளர் உலகில் முன்னணி எழுத்தாளராக கன்னிக்கோவில் இராஜா அவர்களும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவருடைய சிறுவர்களுக்கான கதைகள் கடல் கடந்தும் பல்வேறு உலகத் தமிழர்களிடையே பரவலாக வாசிப்பை பெற்று வருகிறது. அவர் எழுதிய சிறார் கதையை #வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நூலை #லாலிபாப் சிறுவர் ...
Comments
Post a Comment